இன்றைய வசனம்
விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
- எபேசியர் 3:17-19

Adimai naan aandavare lyrics

அடிமை நான் ஆண்டவரே
அடிமை நான் ஆண்டவரே
அடிமை நான் ஆண்டவரே - என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
1.என் உடல் உமக்குச் சொந்தம் - இதில்
எந்நாளும் வாசம் செய்யும்
2.உலக இன்பமெல்லாம் - நான்
உதறித் தள்ளி விட்டேன்
3.பெருமை செல்வமெல்லாம் - இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
4.வாழ்வது நானல்ல - என்னில்
இயேசுவே வாழ்கின்றீர்
5.என் பாவம் மன்னித்தருளும் - உம்
இரத்தத்தால் கழுவிவிடும்
6.முள்முடி எனக்காக - ஐயா
கசையடி எனக்காக
7.என் பாவம் சுமந்து கொண்டீர் - என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்


No comments:

Post a Comment

Newerpost Older post Home