இன்றைய வசனம்

YUTHA RAJA SINGAM UYIRTHELUNDHAAR LYRICS

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாள கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே
2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே
3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன
4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே
5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார்
6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை
7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம்



No comments:

Post a Comment

Newerpost Older post Home