இன்றைய வசனம்

Santhosam ponguthey

சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
1. வழி தப்பி நான் திரிந்தேன் - பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே --- சந்தோஷம்
2. சத்துரு சோதித்திட தேவ
உத்திரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல ஏசு எந்தன்
சொந்தமானாரே --- சந்தோஷம்
3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
அவரும் பரலோகத்தில்
ஆண்டவரோடு வாழவே
நானும் தேவ அன்பையே
நாளும் கூறிடுவேன் --- சந்தோஷம்


No comments:

Post a Comment

Newerpost Older post Home