இன்றைய வசனம்

Idtho manusarin mathil devaathi devanae

இதோ மனுஷரின் மத்தியில்
பல்லவி
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !
1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! --- இதோ
2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் - தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே ! --- இதோ
3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே
என்றும் துதியுடனே - அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! --- இதோ
4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் - சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே ! --- இதோ
5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் --- இதோ


No comments:

Post a Comment

Newerpost Older post Home