இன்றைய வசனம்
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
- I கொரிந்தியர் 15:55-57

Akkini nerupaai song lyricsAkkini nerupaai song lyrics

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்அபிஷேகம் தந்து வழிநடத்தும் (2)
1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே (2)
எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே - (2)
எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் .. இன்று (2)
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய் (2)
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே - (2)
எங்களின் குற்றங்களை எரித்து விடும் - (2)
3. ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும் (2)
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே - (2)
எங்களை அனுப்பும் தேசத்திற்கு - (2)
4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே (2)
அன்னிய மொழியை பேச வைத்தீரே - (2)
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே - (2)
5. இரவு நேரத்தில் நெருப்புத் துணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே - (2)
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட - (2)
எங்களை நிரப்பும் ஆவியினால் - (2)
song:akkini nerupai lyrics
album:jebathotta jeyageethangal
by father.s.j.berchmans

No comments:

Post a Comment

Newerpost Older post Home